செவ்வாய், 4 நவம்பர், 2025

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்

 

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் வாழ்க்கைக் குறிப்புகள்




1920 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ். எஸ். எல். சி.,) வரை படித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கை யில் கல்வி தடைப்பட்டுவிட்டது.

1943 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள்  தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்து களால் கவரப்பட்டு அய்யாவின் தொண்ட ராகப் பணியாற்ற வந்தவர்.

1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி 'திராவிடர் கழக' மாக மாறிய மாநாட்டில் (27-8-1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி கே. அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறி முகம் செய்து வைக்கப்பட்டார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப்போரில் அரசு தடையை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்,

1949 பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணி யம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31-ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம் 9-ஆம் நாள் பெரியார்-மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே. அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று தமிழிலும் E.V.R.மணியம்மை என்று ஆங்கிலத் திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8-ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தரச் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார், முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல் களைத் திரும்பப் பெற்றார். மணியம் மையார் தலைமையில் சவ ஊர்வலம் நடந்தது.

19-1-1958 'விடுதலை'யில் வெளியான "இளந் தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமான ஈ.வெ.ரா. மணியம் மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1957-58 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர் வடையாமலும், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும் அன்னை மணியம் மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற - திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் (19-7-1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

1973 டிசம்பர் 24-ஆம் நாள் 'பகுத்தறிவு பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்றபின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப் பேற்றுக் கழகத்தை வழி நடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

3-4-1974 அன்று அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26-5-1974 அன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக்கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23-9-1974 அன்று பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் தொடங்கப்படஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24-9-1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு அன்னை மணியம் மையார் தலைவராகவும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

1974 டிசம்பர் 25-ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் 'இராவண லீலா' என்னும் இன உணர்வு வரலாற்றைப் படைத்துக் காட்டினார்.

சென்னை பெரியார் நூலகம் - ஆய்வகத்தை  நிறுவினார். பெரியார் மணி யம்மை பெண்கள் உயர் நிலைப் பள்ளி' யைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.

1975 ஏப்ரல் 26-இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்து கொண்டு பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை அண்ணாசாலையில் 21-9-1975 அன்று கலைஞர் சிலையை அமைத்தார்.

1975 செப்டம்பர் 9-ஆம் நாள் 'இராவண லீலா'. வழக்கில் மணியம்மை மற்றும் தோழர் களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங் கப்பட்டது. வழக்கை எதிர்த்து மேல்முறை யீடு செய்யப்பட்டது..

'மிசா' காலத்தில் 16-9-1976 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப் பட்டார்.

1977 ஏப்ரல் 25-ஆம் நாள் 'இராவண லீலா' வழக்கில் மணியம்மையாரும் மற்றத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலை யிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார்திடல் முகப்பில் 'பெரியார் பில்டிங்ஸ்' என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16-ஆம் நாள் மார டைப்பு ஏற்பட்டு சென்னை பொதுமருத்துவ மனையில் காலமானார்.

இன்று வரலாறாய் ஒளிர்கிறார்.

- விடுதலை ஞாயிறு மலர், 9 .3 .19


“ராவணலீலா”

25.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில், “ராவணலீலா” நடைபெற்றது. இராவணனாக அணைக்கரை டேப்தங்கராசு வேடமிட்டு நடித்தார். இரவு 7 மணிக்கு ராமன், சீதை, லட்சுமணன் உருவப் பொம்மைகளுக்கு அன்னை மணியம்மையார் தீ வைத்தார். இந்நிகழ்வு இந்தியாவையே உலுக்கியது. அம்மையார் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு, மறுநாள் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. எழும்பூர் 5ஆவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தண்டனை விதித்தது. இதை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் 25.4.1977 அன்று தீர்ப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். டில்லியில் நடக்கும் “இராமலீலாவிற்கு” எதிர்வினைதான் இந்த “இராவணலீலா”. இந்த நிகழ்விற்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இந்நிகழ்வால் கலவரம் எதுவும் நிகழவில்லை. இது மதத்திற்கு எதிரான விழா அல்ல என்று தமது தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய் வழங்கியிருந்தார்.

எழும்பூரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலையை கி.வீரமணி திறந்து வைத்தார்

எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள வேனல்ஸ் சாலைக்கு ‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்த நிலையில் கி.வீரமணி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்ச்சி 7.5.22ஆம் நாள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சிகமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் அமைச்சர்களுக்கும், மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்


சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ்  - எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்) 1916 நவம்பர் 20ல் தென் இந்தி...