வியாழன், 25 டிசம்பர், 2025

முத்துலட்சுமி ரெட்டி


இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே.

பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அம்மையார் -ஏடு ஒன்றினை நடத்தினார். அதன் பெயர் “ஸ்த்ரி தர்மா’’ என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமனதாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவராகவும் ஒளி வீசினார். தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென்றும் நினைவு கூரச் செய்வதாகும்.

இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது தெய்வ காரியத்தில் தலையிடுவதாகும் _ இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார். ‘அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில்  தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே!’ என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.l


பனகல் ராஜா

 


சமூக நீதிக்கான பலமான அடித்தளம் அமைத்த
பனகல் ராஜா தலைமையிலான அமைச்சரவை : 19.11.1923

பனகல் அரசரின் ஆட்சிக் காலம், இந்தியாவிலேயே முதன் முறையாக சமூக நீதிக்கான பல முன்னோடிச் சட்டங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டப்படுகிறது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

அரசுப் பணிகளில் பார்ப் பனரல்லாதோர், பார்ப்பனர், இஸ்லாமியர், கிறிஸ்துவர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய அரசாணையை (ஆகஸ்ட் 1921) நிறைவேற்றியது. இது முதன் முறையாக சென்னை மாகாணத் தில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த முதல் சட்டம் ஆகும்.

‘ஆதி திராவிடர்’ – பெயர் மாற்றம்

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத் தும் ‘பஞ்சமர்’ போன்ற சொற்களுக்குப் பதிலாக “ஆதி திராவிடர்” என்ற சொல்லை அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

பஞ்சமி நிலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவைவிட, பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் ஆதித்திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு பல மடங்கு அதிகமாக இருந்தது.

 நிர்வாகம் – சமூகச் சீர்திருத்தங்கள்

இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (1925): இந்து கோயில்கள் மற்றும் மடங்களின் நிதிகள், நிர்வாகம் ஆகியவற்றில் இருந்த முறைகேடுகளைக் களைவதற்காகவும், கோயில் நிதியை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தவும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச்சட்டத்தை நிறை வேற்றினார்.

 பெண்களுக்கான வாக்குரிமை (1921)

நீதிக்கட்சி அரசு பெண்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிக்கும் சட்டத்தை (1921) இயற்றியது. இது இந்தியாவின் பிற மாகாணங்களுக்கு முன்னதாகச் செய்யப் பட்டது.

கல்வியில்….

மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப் பட்டது. இந்திய மருத்துவ முறைகளை வளர்க்கவும், முறைப்படுத்தவும் இந்திய மருத்துவப் பள்ளியை (இன்றைய கிண்டி மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி) நிறுவினார்.

ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.

 நகரத் திட்டமிடல்

சென்னை நகரத் திட்டமிடல் சட்டம், 1920 நிறைவேற்றப்பட்டு, தியாகராயர் நகர்  போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க வழிவகுத்தது.

 

சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ்  - எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்) 1916 நவம்பர் 20ல் தென் இந்தி...