வியாழன், 25 டிசம்பர், 2025

பனகல் ராஜா

 


சமூக நீதிக்கான பலமான அடித்தளம் அமைத்த
பனகல் ராஜா தலைமையிலான அமைச்சரவை : 19.11.1923

பனகல் அரசரின் ஆட்சிக் காலம், இந்தியாவிலேயே முதன் முறையாக சமூக நீதிக்கான பல முன்னோடிச் சட்டங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டப்படுகிறது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

அரசுப் பணிகளில் பார்ப் பனரல்லாதோர், பார்ப்பனர், இஸ்லாமியர், கிறிஸ்துவர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய அரசாணையை (ஆகஸ்ட் 1921) நிறைவேற்றியது. இது முதன் முறையாக சென்னை மாகாணத் தில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த முதல் சட்டம் ஆகும்.

‘ஆதி திராவிடர்’ – பெயர் மாற்றம்

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத் தும் ‘பஞ்சமர்’ போன்ற சொற்களுக்குப் பதிலாக “ஆதி திராவிடர்” என்ற சொல்லை அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

பஞ்சமி நிலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவைவிட, பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் ஆதித்திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு பல மடங்கு அதிகமாக இருந்தது.

 நிர்வாகம் – சமூகச் சீர்திருத்தங்கள்

இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (1925): இந்து கோயில்கள் மற்றும் மடங்களின் நிதிகள், நிர்வாகம் ஆகியவற்றில் இருந்த முறைகேடுகளைக் களைவதற்காகவும், கோயில் நிதியை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தவும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச்சட்டத்தை நிறை வேற்றினார்.

 பெண்களுக்கான வாக்குரிமை (1921)

நீதிக்கட்சி அரசு பெண்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிக்கும் சட்டத்தை (1921) இயற்றியது. இது இந்தியாவின் பிற மாகாணங்களுக்கு முன்னதாகச் செய்யப் பட்டது.

கல்வியில்….

மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப் பட்டது. இந்திய மருத்துவ முறைகளை வளர்க்கவும், முறைப்படுத்தவும் இந்திய மருத்துவப் பள்ளியை (இன்றைய கிண்டி மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி) நிறுவினார்.

ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.

 நகரத் திட்டமிடல்

சென்னை நகரத் திட்டமிடல் சட்டம், 1920 நிறைவேற்றப்பட்டு, தியாகராயர் நகர்  போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க வழிவகுத்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ்  - எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்) 1916 நவம்பர் 20ல் தென் இந்தி...